ஈரோடு மாவட்டம் நம்பியூர் அரசு கலை கல்லூரிக்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ 15 லட்சம் மதிப்பில் புதிய காங்கிரீட் சாலை அமைக்கும் பணி துவக்க விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.


நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சூரியகாந்தி தலைமை தாங்கினார்.நம்பியூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் நந்தகுமார், ஒன்றிய துணைச் செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவரும், நம்பியூர் ஒன்றிய செயலாளர் மெடிக்கல் செந்தில்குமார் கலந்து கொண்டு புதிய காங்கிரஸ் ஆலுக்கான பூமி பூஜை தொடங்கி வைத்தார். திமுக கட்சி நிர்வாகிகள் 8 வார்டு செயலாளர் என்.எஸ் ஆனந்தகுமார், இளங்கோ, ராதாகிருஷ்ணன், பழனிச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.