
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முடிவுற்ற துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
நம்பியூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தீபா,நம்பியூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட கழக செயலாளர் நல்லசிவம், நம்பியூர் பேரூராட்சி
2 – வது வார்டு புதுசூரிபாளையம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காமராஜர், அண்ணா, கலைஞர் பயணியர் நிழற்குடை,
புதுசூரிபாளையம் மயானத்திற்கு செல்லும் கான்கிரீட் சாலை மற்றும் மயானத்தில் பொதுமக்கள் காத்திருக்கும் காத்திருப்பு அறை ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் திமுக கட்சி நிர்வாகிகள் ஆனந்தகுமார்,
நந்தகுமார், முருகசாமி,காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மனோகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.