


நம்பியூர் ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குருமந்தூரில் ஆண்டுவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆண்டு விழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி.வேலுமணி அவர்கள் தலைமை ஏற்றார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. கிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் விழா நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியர் திருமதி. அ.சி.கலைச்செல்வி அனைவரையும் வரவேற்றார், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு.ம. கந்தசாமி பள்ளியின் ஆண்டறிக்கை சமர்பித்தார்.,
விளையாட்டு மற்றும் இலக்கிய மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பரிசுகளை வழங்கினர். விழாவில் மாணவ-மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளை ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திருமதி.ஜெ.சுகன்யா, திருமதி.கஸ்தூரி பாய், திருமதி.ப.சரோஜா, திரு.அர.சுதாகரன், திருமதி.கெளசல்யா, மற்றும் அங்கன்வாடி பொறுப்பாளார் திருமதி.செமிரா ஆகியோர் கலை நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். பெற்றோர்களும் பொதுமக்களும் மாணவ- மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
விழா இறுதியில் கணித பட்டதாரி ஆசிரியர் திரு.நா.சுரேஷ் அவர்கள் நன்றி தெரிவித்தார்.