கோபி அருகே உள்ள தண்ணீர் பந்தல் புதூரில் யூகாலிப்டஸ் தைலத்தை குடித்து இளம்பெண் தற்கொலை

A young girl committed suicide by drinking eucalyptus ointment at the Water Pandal Putur near Gobi

கோபி அருகே உள்ள தண்ணீர் பந்தல் புதூரில் யூகாலிப்டஸ் தைலத்தை குடித்து இளம்பெண் தற்கொலை.தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் மகாலட்சுமி (38). இவரது மகள் ரஞ்சனி(20). கடந்த 2 வருடங்களுக்கு முன் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கொடைக்கானலில் உள்ள உறவினரை பார்க்க சென்ற போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு மணிகண்டன் கவுந்தப்பாடியில் வசித்து வந்தார். மணிகண்டன் கோபி அருகே செயல்பட்டு வரும் தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் மனைவி, குழந்தையுடன் தண்ணீர்பந்தல்புதூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.அங்கு வந்த மணிகண்டனின் பெற்றோர், ரஞ்சனியின் குழந்தையை எடுத்துள்ளனர்.ரஞ்சனி குழந்தையை கொடுக்க மறுக்கவே இரு தரப்பிரனருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதில் மனமுடைந்த ரஞ்சனி வீட்டிற்குள் சென்று யூகாலிப்டஸ் தைலத்தை குடித்து விட்டு மயங்கி உள்ளார். அருகில் இருந்தவர்கள் ரஞ்சனியை மீட்டு சிகிச்சைக்காக கூகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது வழியிலேயே ரஞ்சனி உயிரிழந்தார்.இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆவதால் கோபி சப் கலெக்டர் சிவானந்தம் விசாரணை நடத்தி வருகிறார்.இந்நிலையில் ரஞ்சனியின் உடல் உடற்கூறு ஆய்விற்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.நேற்று மாலை வரை உடற்கூறு ஆய்வு செய்யப்படாத நிலையில் ரஞ்சனியின் உடற்கூறு ஆய்விற்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக கோபி அரசு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

இரண்டு நாட்களாக கோவை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்திருந்த ரஞ்சனியின் உறவினர்கள், அதை ஏற்க மறுத்ததோடு, ரஞ்சனியின் இறப்பில் சந்தேகம் இல்லை என்றும், கோபி அரசு மருத்துவமனையிலேயே உடற்கூறு ஆய்வு செய்து தருமாறும் கூறினர்.ஆனால் அரசு மருத்துவர்கள் அதை ஏற்க மறுக்கவே ஆத்திரமடைந்த ரஞ்சனியின் உறவினர்கள் கோபி சத்தி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.இதுகுறித்து தகவல் அறிந்த கோபி போலீசார் உடனடியாக அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து மறியல் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கோபி அரசு மருத்துவமனை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment