கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற விதைகள் திருவிழாவில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 50 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.




கோபிசெட்டிபாளையம் ல.கள்ளிப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கொங்கு மண்டல விதைகள் மற்றும் உணவு திருவிழா நடைபெற்றது




இந்த விதைகள் மற்றும் உணவுத் திருவிழாவில் பாரம்பரிய காய்கறி விதைகள் கிழங்கு வகைகள் 1000க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் உழவனின் பண்டைய பயன்பாடு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன,




200 விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் பகிர்வு அளிக்கபட்டும், குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டுக்கள், மண்பாண்டங்கள் செய்தல் கைவினைப் பொருட்கள் செய்தல் உள்ளிட்டவை பயிற்சி அளிக்கபட்டது..
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விதைகள் திருவிழாவில் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்


அது மட்டுமன்றி ஈரோடு திருப்பூர் கோவை, சேலம் தர்மபுரி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் கலந்து இந்த விதைகள் திருவிழாவில் கொண்டனர்.