கோபிசெட்டிபாளையம் அருகே கீழ்பவானி வாய்கால் நீரில் மாயமாகி தேடப்பட்ட வந்த 31 வயது இளைஞர் சடலமாக மீட்க்கப்பட்டார்

A 31-year-old youth, who had disappeared in the water of Kiliphavani canal near Kopisettipalayam, was found dead.

கோபிசெட்டிபாளையம் அருகே கீழ்பவானி வாய்கால் நீரில் மாயமாகி தேடப்பட்ட வந்த 31 வயது இளைஞர் சடலமாக மீட்க்கப்பட்டார்
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள எலத்தூர் தெற்குப்பதி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரின் மகன் சிவக்குமார் (31) கடந்த 30ஆம் தேதி மதியம் வெளியே சென்று விட்டு வருவதாக கூறிச் சென்றுள்ளார்.இரவு வெகு நேரமாகியும் வீட்டுக்கு சிவக்குமார் வராததால் அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் தேடிவந்தனர்.
இந்த நிலையில் செட்டிபாளையம், இரட்டைவாய்க்கால் பகுதியில் சிவக்குமாரின் துணிகள் செல்போன் செருப்பு உள்ளிட்டதை கரையில் இருப்பதாக அங்கு உள்ளவர்கள் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து தன் மகனை காணவில்லை என கடத்தூர் காவல் நிலையத்தில் தந்தை சுப்பிரமணியன் புகார் அளித்துள்ளார், புகாரை பெற்றுகொண்ட கடத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான சிவக்குமாரை தேடிவந்தனர்.
அதனைத் தொடர்ந்து சிவக்குமார் காணாமல் போனதாக கூறப்படும் இரட்டை வாய்க்கால் பகுதியில் நம்பியூர் தீயணைப்பு துறையினர் மற்றும் கடத்தூர் காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று குருமந்தூர் பகுதி அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் ஆண் சடலம் கரை ஒதுங்கியதாக கடத்தூர் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் படி அங்கு சென்ற காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு விசாரணை நடத்தினார் விசாரணையில் காணாமல் போனதாக கூறப்படும் எலத்தூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மகன் சிவக்குமார் என்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து பிரேதத்தை மீட்ட கடத்தூர் காவல் துறையினர் கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து திருமணமாகாத 31 வயது இளைஞரின் இறப்பின் காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment