வட்டார அளவிலான வானவில் மன்ற போட்டிகள் நம்பியூர் வட்டார வளமையத்தில் நடைபெற்றது.
இதில் நம்பியூர் வட்டாரத்தில் உள்ள 34 பள்ளியில் படிக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


மாணவர்களுக்கு 1.செயல் திட்டம் 2.ஆய்வுக் கட்டுரை 3.இயங்கு மாதிரி 4.கணித மாதிரிசமர்ப்பித்தல் முதலிய பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது .இதில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்தபடியாக மாவட்ட அளவில் நடைபெறும் வானவில் மன்ற போட்டிகளில் பங்கு கொள்வார்கள்.
அதில் முதன்மையடையும் மாணவர்களுக்கு மாநில அளவில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும், இதன் மூலம் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்லும் வாய்ப்பு சிறந்த மாணவர்களுக்கு கிடைக்கவுள்ளது.


இதன் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு அறிவில் மற்றும் கணித மனப்பான்மையுடன் சேர்ந்து அறிவியல் ஆராய்ச்சி செய்யும் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த வானில் மன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.இந்த வானவில் மன்ற போட்டிகள் செல்வராஜ் பொறுப்பு வட்டார வளமைய மேற்பார்வையாளர், மெய்யப்பன், சிவகாமி, ஜெயபிரகாஷ், சண்முக வடிவு ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆகியோரின் மேற்பார்வையில் சிறப்பாக நடைபெற்றது . இந்த நிகழ்வில் நம்பியூர் வானவில் மன்ற கருத்தாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் நம்பியூர் வானவில் மன்ற கருத்தாளர்களான முகமது ஜமீலா நஸ்ரின், நதியா ஆகியோர் கலந்து கொண்டனர். வானவில் மன்றம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு நடமாடும் ஆய்வகமாக இருப்பதுடன், அவர்கள் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு தலைப்புகளில் மாணவர்களை பல்வேறு போட்டிகளில் தயார்படுத்தி அவர்களின் திறமையை வெளிக் கொண்டு வரும் மிகப்பெரிய பாலமாக செயல்பட்டு வருகின்ற வானவில் மன்றம், தற்போது மாணவர்களின் ஆராய்ச்சி ஆர்வத்தை தூண்டும் வகையில் புதிய அணுகுமுறையை கையெடுத்து அரசு பள்ளி மாணவர்களை ஆராய்ச்சி மாணவர்களாக மாற்றும் வெற்றிப் பயணத்தை துவங்கியுள்ளது .