வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்; தேர்தலாக 2026 சட்டமன்றத் தேர்தல் அமையும், அதிமுகவை தமிழகத்தில் யாராலும் வீழ்த்த முடியாது என்ற வரலாற்றை படைப்போம் – கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.


கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் கலந்து கொண்டார்.


தொடர்ந்து நிகழ்ச்சியில், கோபி நகராட்சி உடன் குளம்பாளையம் பா வெள்ளாளபாளையம், மொடச்சூர் உள்ளிட்டா ஐந்து ஊராட்சிகள் இணைக்கப்படுவதை கைவிட வலியுறுத்தி சட்டமன்றத்தில் வலியுறுத்துவதாகவும், கோபிசெட்டிபாளையத்தில் புறவழிச் சாலை அமைக்க சட்டமன்றத்தில் குரல் கொடுப்பதாகவும், அதிமுகவின் 53 வது ஆண்டு விழாவையொட்டி அனைத்து பகுதிகளிலும் தொண்டர்கள் கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கவும்,

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியில் அ பாடுபட வேண்டும், அந்தியூர் பர்கூர் மலையை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இரவு நேர போக்குவரத்து தடைவிக்கப்பட்டுள்ளது, இதனால் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இரவு நேர போக்குவரத்து அனுமதிக்க கோரி அரசை வலியுறுத்துவதாகவும் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் சிறப்புரையின்போது.அதிமுக சார்பில் மக்களுக்காக அனைத்து போராட்டங்களை நடத்தி வருகின்றோம், அதிமுகவை தமிழகத்தில் யாராலும் வீழ்த்த முடியாது என்ற வரலாற்றை படைப்போம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விட்டோம் என்று திமுகவினர் எண்ணிக் கொண்டுள்ளனர்.வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்; தேர்தலாக 2026 சட்டமன்றத் தேர்தல் அமையும் என்றார்.
இதில் முன்னாள் எம்எல்ஏ ரமணிதரன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் கழக இணைச் செயலாளருமான அனுராதா, மாவட்ட கழகத் துணைச் செயலாளர் சுலோச்சனா நடராஜன், யூனியன் சேர்மங்கள் மௌதீஸ்வரன்,சுப்பிரமணியம், கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ், ஒன்றிய செயலாளர் வேலுமணி, தம்பி சுப்ரமணியம், ஈஸ்வரமூர்த்தி, சீனிவாசன், ஹரி பாஸ்கர், சிவராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மோகன் குமார், முத்துராமன், மாவட்ட எம்ஜிஆர் அணி அருள் ராமச்சந்திரன், மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை தலைவர் சிபிஜெட் கார்த்திக், அம்மா பேரவை செயலாளர் மொட்டணம் ஜேசிபி மூர்த்தி, எலத்தூர் பேரூர் கழகச் செயலாளர் சேரன் சரவணன், கெட்டுச்சவீர் ஊராட்சி மன்ற தலைவர் மகுடேஸ்வரன், கூட்டுப் புல்லம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.