நம்பியூர் காவல்துறை சார்பில் காவலன் செயலி குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்களின் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஈரோடுமாவட்ட காவல்துறை சார்பில் கல்லூரி மற்றும் மக்கள்கூடும் இடங்களில் காவலன் செயலி குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நம்பியூர் காவல்துறை சார்பில் குருமந்தூர், குருமந்தூர்மேடு, மூணாம்பள்ளி, நடுப்பாளையம் எலத்தூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள், மாணவ-மாணவிகளுக்கு காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
காவல் ஆய்வாளர் ரவி, தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் mc சண்முகம், பெண் உதவியாளர் ருக்மணி, பெண் முதல் நிலைக் காவலர் விஜயலட்சுமி, காவலர் கோவிந்தசாமி உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டு காவலன் செயலி குறித்தும், இந்த செயலியை தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொண்டால் தனியாக செல்லும் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக அமையும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் தங்களது செல்போன்களில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டனர்.