நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான எலத்தூர் வேமண்டம்பாளையம் மலையப்பாளையம் திட்டமலை,உள்ளிட்ட முருகன் கோவில்களில் தைப்பூச தேர்த்திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

இதில் நம்பியூர் அருகே உள்ள மலையப்பாளையம் ஸ்ரீ உதயகிரி முத்து வேலாயுத சுவாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.நேற்று அதிகாலை பூஜைகள் நடைபெற்று காலை 6:00 மணி முதல் 7:30 வரை ஒன்றின் பின் ஒன்றாக இரண்டு தேர்களையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.தொடர்ந்து மலையப்பாளையம், எம்மாம் பூண்டி, நம்பியூர், வரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள், காவடி பால் காவடி, இளநீர் காவடிகளை மேளதாளம் முழங்க ஆடியபடி அரோகரா கோசம் முழங்க வந்து கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான மகாதரிசனம் திருவிழா வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.இதேபோல் திட்டமலை அருள்மிகு குழந்தை குமாரசாமி கோவில்,நாகமலை முருகன் கோவில்,வேமண்டம்பாளையம் குமரன் குன்று முருகன் கோவிலில் சிறப்பாக தைப்பூச விழா நடைபெற்றது.இதில் எமண்டம்பாளையம் குமரன் குன்று முருகர் கோவிலில் 108 சங்க அபிஷேகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன அதனை தொடர்ந்து அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.