கோபிசெட்டிபாளையம் அருகே கர்ப்பிணி பெண் பிரசவத்திற்கு பிறகு உயிரிழந்த சம்பவத்தில் பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த கிராம மக்கள் கோபி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஊர்வலமாகச் சென்று மனு அளித்தனர்.

In the case of the death of a pregnant woman after childbirth near Kopisetipalayam, the villagers who had protested against disposing of the body of the woman, went in a procession to the Gobi Sir collector's office and filed a petition.

கோபிசெட்டிபாளையம் அருகே கர்ப்பிணி பெண் பிரசவத்திற்கு பிறகு உயிரிழந்த சம்பவத்தில் பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த கிராம மக்கள் கோபி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஊர்வலமாகச் சென்று மனு அளித்ததை தொடர்ந்து இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சார் ஆட்சியர் சிவானந்தம் கூறியதையடுத்து உடலை நல்லடக்கம் செய்ய கிராம மக்கள் ஒப்புக்கொண்டு போராட்டத்தை கைவிட்டனர்.

1000263144
1000263147

தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இறந்த மைதிலியின் குடும்பத்துக்கு நிவாரண தொகை வழங்கவும் கோரிக்கை..கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள சுண்ட பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், இவருக்கு மைதிலி(28) என்ற மனைவியும் பிரதிக்ஷா என்ற 6 வயது மகளும் உள்ளார், மைதிலி இரண்டாவது முறையாக கருவுற்றிருந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கோபி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1000263148
1000263149

இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மைதிலிக்கு நடைபெற்ற பிரசவத்தில் ஆண்; குழந்தை பிறந்துள்ளதுஅதை தொடர்ந்து பிரசவத்திற்கு பின்னர் மைதிலிக்கு இரத்தப்போக்கு அதிகம் இருப்பதாக கோபி அரசு மருத்துவமனையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு மைதிலியை கொண்டு சென்றுள்ளனர். .

1000263150
1000263151

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மைதிலி நேற்று முன்தினம் 28.09.2024 உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் மைதிலியின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு 29.09.2024 நேற்று மாலை உடல் சொந்த ஊரான சுண்டபாளையம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.மைதிலியின் உடல் சுண்ட பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு கொண்டு செல்லும் போது மைதிலியின் கணவனை சுண்ட பாளையம் கிராமத்தில் இறக்கிவிட்ட காவல்துறையினர் நேராக மயானத்திற்கு உடலை கொண்டு சென்தாக கூறப்படுகிறது, இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்களுக்கு உடலை நல்லடக்கம் செய்ய விடாமல் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனை தொடர்ந்து இன்று மைதிலியின் இறப்புக்கு நீதி கேட்டு சுண்டபாளையம் கிராமத்திலிருந்து 300 கும் மேற்பட்ட கிராம மக்கள் கோபியில் உள்ள சார்; அலுவலகத்தில் சார் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க ஊர்வலமாக சென்றனர்,வேட்டைக்காரன் கோவில் பகுதியில் இருந்து கோபி பிரதான சிக்னல் வழியாக சுமார் 5 கி மீ தூரம் ஊர்வலமாகச் சென்று சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் சிவானந்தத்தை சந்தித்து மைதிலி இறப்பிற்கு காரணமான கோபி அரசு மருத்துவர் மீது செவிலியர் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இறந்து போன மைதிலியின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவி வழங்க வலியுறுத்தியும் மனு அளிக்கப்பட்டது,அதனை தொடர்ந்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சார் ஆட்சியர் சிவானந்தம் கூறியதைத் தொடர்ந்து உடலை நல்லடக்கம் செய்ய கிராம மக்கள் ஒப்புக் கொண்டு போராட்டத்தை கைவிட்டனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்