கோபிசெட்டிபாளையம் மூலவாய்க்கால் அருகே, தங்கை கண்முன்னே பேருந்தின் டயரில் சிக்கி தலை நசுங்கி அண்ணன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோபி வழியாக ஈரோடு நோக்கி தனியார் பேருந்து பயனிகளுடன் சென்று கொண்டிருந்தது,அப்போது புதுவள்ளியம்பாளையம் மூலவாய்க்கால் என்ற இடத்தில் பேருந்து வந்து கொண்டிருந்த போது இடது புறத்தில் சண்முகம் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.


பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் நவீன் என்ற பயனி முன் படியில் தொங்கியவாறு பயனம் செய்து கொண்டிருந்தார்.
எதிர்பாரத விதமாக இடது புறம் பேருந்து திரும்பியதில் நவீன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சண்முகத்தின் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கியதில் நவீன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.பலந்த காயமமைடந்த விவசாயி சண்முகத்தை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து இருவரும் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது, அதே பேருந்தில் பயனம் செய்த நவீனின் தங்கை கண்முன்னே விபத்தில் உயிரிழந்த அண்ணன் நவீனை கண்டு பரிதவித்து கதறியாலும் காட்சி காண்பவரை கண்கலக்க வைத்துள்ளது,இந்த விபத்து குறித்து கடத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.