2026 அதிமுக ஆட்சியில் அமரும், அதிமுக கூட்டணி முறிவு குறித்து பலரும் பேசி வருகின்றனர் கூட்டணி உடைகிறதோ இல்லையோ மக்கள் மனம் மாறி உள்ளனர்,
பணத்தை கொடுத்து விட்டு வாக்கை பெற்று விடலாம் என கனவு காணாதீர்கள் அது தூள் தூளாக்கப்படும். கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே ஏ. செங்கோட்டையன் பேச்சு


கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் மலையபாளையம் பகுதியில் அதிமுக சார்பில் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொது கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்ட மன்ற உறுப்பினருமான கே. ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.


அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் கே ஏ. செங்கோட்டையன்.அதிமுக ஆட்சியில் 53 லட்சத்து 64 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டது, தற்போது திமுக ஆட்சியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினி குறித்து கேட்டால் அதனை பரிசளித்து வருவதாக தெரிவிக்கின்றனர்,கடந்த மூன்று கால ஆண்டுகளாக பரிசீலித்து அளித்து வருவதாக தெரிவிக்கும் திமுக அரசு தற்போது கேட்டாலும் அதைத்தான் சொல்லும்,750 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதற்கான திட்டங்களை நிறைவேற்றி ஐந்து லட்சத்து 17 ஆயிரம் மாணவர்கள் ஆண்டுதோறும் சிறந்த கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வந்த திட்டம் தற்போது அமல் படுத்தப்படவில்லை.
2026 அதிமுக ஆட்சியில் அமரும், கூட்டணி உடைகிறதோ இல்லையோ மக்கள் மனம் மாறி உள்ளனர், பணத்தை கொடுத்து விட்டு வாக்கை பெற்று விடலாம் என கனவு காணாதீர்கள் அது தூள் தூளாக்கப்படும்.அதிமுக ஆட்சியில் எவ்வளவு பேருந்துகள் இயக்கப்பட்டன என மக்கள் அறிவார்கள், தற்போது மகளிருக்கு இலவச கட்டணத்தில் இயக்கப்படும் நகர பேருந்துகள் மூன்று மணி நேரத்திற்கு ஒரு பேருந்து தான் இயக்கப்படுகின்றன.திரை உலகத்திலும் எம்ஜிஆரை யாராலும் வீழ்த்த முடியவில்லை 13 ஆண்டுகால அரசியலிலும் அவரை யாராலும் வீழ்த்த முடியவில்லை. ஒரு தலைவன் பெயரைச் சொன்னாலே வெற்றி பெறுகின்ற வரலாறு தமிழகத்தில் இருந்துள்ளது.அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகளை 3 ஆண்டு காலத்தில் திமுக அரசு சரியாக செய்யவில்லை, இரண்டரை ஆண்டு காலத்தில் அதிமுக அரசு முடித்து காண்பித்தது என அவர் பேசினார்