நம்பியூர் பகுதியில் பல்வேறு கடைகளில் திருட்டால் மக்கள் அச்சம்

People fear theft from various shops in Nambiur area

நம்பியூர் கடைவீதிகளில் உள்ள கடைகளில் நேற்று முன் தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். நம்பியூர்-–கோபி ரோடு புத்தக கடை, நம்பியூர்-–திருப்பூர் ரோட்டில் உள்ள அரிசி கடை, நம்பியூர்-–புளியம்பட்டி ரோட்டில் உள்ள பாத்திரக்கடை உள்ளிட்ட 6 மேற்பட்ட கடைகளில் மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் கடைகளில் உள்ள பணத்தை சுமார் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 6 க்கும் மேற்பட்ட கடைகளில் ஒரே நாளில் நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்பியூர் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை செய்து திருடர்களை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சங்கத்தினர் கோரிக்கையும் வைத்துள்ளனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்