கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் நகைக்கடையில் நகை வாங்குவது போல் நாடகமாடி இரண்டு தங்க மோதிரங்களை திருடி சென்ற பெண்ணை கோபி போலீசார் கைது செய்தனர்.
கோபிசெட்டிபாளையம் கடை வீதியில் செயல்பட்டு வரும் தனியார் தங்க நகை கடைக்கு பெண் ஒருவர் மோதிரம் வாங்க வந்துள்ளார்அப்போது மோதிரங்களை பார்த்துவிட்டு பிடிக்கவில்லை என அங்கிருந்து அந்த பெண் வெளியேறியுள்ளார்பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த நகைகளை கடை ஊழியர்கள் சரி பார்க்கும் போது 3 கிராம் எடையுள்ள இரண்டு மோதிரங்கள் காணாமல் போனது தெரியவந்ததுஇது குறித்து கடை ஊழியர்கள் கோபிகாவின் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் அந்த பெண்ணை தேடி வந்தனர்.இந்த நிலையில் கோபி அரசு மருத்துவமனை அருகே அந்தப் பெண்ணை கண்டதாக கடை ஊழியர்கள் கோபி காவல்துறையினருக்கு தெரிவித்த தகவலின் பெயரில் அங்கு சென்ற காவல் துறையினர் அந்தப் பெண்ணை பிடித்து விசாரணை செய்தனர்விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியில் சேர்ந்த பிரியதர்ஷினி என்பது தெரிய வந்தது.தனியார் நகைக்கடையில் 3 கிராம் எடையுள்ள இரண்டு மோதிரங்களை திருடி சென்றதும் பிரியதர்ஷினி தான் என்பது தெரியவந்ததுஅதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை பிரியதர்சினியை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்
கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் நகைக்கடையில் நகை வாங்குவது போல் நாடகமாடி இரண்டு தங்க மோதிரங்களை திருடி சென்ற பெண்ணை கோபி போலீசார் கைது செய்தனர்.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam