தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் மதமாற்றம் அதிகமாக உள்ளது இதனை உடனடியாக அரசு தடுக்க வேண்டும் இல்லாவிடில் இந்து முன்னணி மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப் போவதாக கோபிசெட்டிபாளையத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் தனியார் மஹாலில் இந்து முன்னணியின் மாநில நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது இதில் இந்து முன்னணியில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டார்
அதனைத் தொடர்ந்து இந்து முன்னனியின் மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது
திருப்பரங்குன்றம் விவகாரத்திற்கு பிறகு தமிழகத்தில் இந்துக்களிடையே மிகப்பெரிய எழுச்சி உருவாகியுள்ளது
ஜூன் 22 அன்று மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் 5லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்தியூர் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கல்லூரி கட்டுவதற்கான முயற்சி நடைபெறுவதை இந்து முன்னனி கண்டிக்கிறது
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பச்சைமலையில் தைப்பூசத்தன்று வாகனம் நிறுத்துமிடத்தில் கூடுதலாக கட்டனம் வசூலித்துள்ள விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
அம்மாப்பேட்டை அருகே உள்ள சொக்கநாதர் கோவில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவேண்டுமென கோர்ட் உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தும்.
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளில் மதமாற்றம் அதிகமாக உள்ளது இதனை உடனடியாக அரசு தடுக்க வேண்டும் இல்லாவிடில் இந்து முன்னணி மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தும்
அரசு மதமாற்றத்தை ஊக்கப்படுத்துவது போல செயல் படுகிறது.
முதலமைச்சரும்
சபாநாயகரும், துணை முதல்வரும் கிருத்துவர்களுக்கு ஆதரவாக பேசுகின்றனர்.
பழைமை வாய்ந்த கோவில்களிலின் கோடிக்கணக்கான வருவாயை மட்டும் எடுத்துக் கொள்ளும் அரசு அக்கோயில்களை புணரமைக்கவோ பராமரிப்பதோ கிடையாது.
பொதுமக்களால் கட்டப்படும் கோயில்களுக்கு கும்பாபிசேகம் செய்ய அனுமதி வழங்க லஞ்சம் கோடுக்க வேண்டியுள்ளது.
கோயில்களில் நடத்தப்படும் கும்பாபிசேகம் மற்றும் செலவுகள் குறித்து
அறநிலையத்துறை வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.
இந்துக்களுக்கு விரோதமாகவும் கடவுள் நம்பிக்கையில்லாமலும் இந்த அரசு இருப்பதால்
பக்தர்கள் சொந்த பணத்தில் கோவிலை கட்டி கும்பாபிசேகம் செய்ய அனுமதி கோரினால் அரசு அனுமதிப்பதில்லை.
அவிநாசி அருகே ராயர்கோவில் பகுதியில் கும்பாபிசேகம் நடத்த அனுமதி வழங்காத அதிகாரிகளை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
கோபிசெட்டிபாளையத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam