மாவட்ட மற்றும் மாநில அளவிலான உலக சிக்கன தின விழா போட்டியில் நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
உலக சிக்கன தின விழா -வை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியரிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் நம்பியூர் குமுதா பள்ளியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ப. பிரவீனா மாவட்ட அளவிலான கவிதை போட்டியில் முதலிடமும் மாநில அளவிலான கவிதைப் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்றுள்ளார். மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டியில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் வி.முகில் மற்றும் ஏ.எம்.ரிஷிக் ஆரியா இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மேலும் 12ம் வகுப்பைச் சேர்ந்த மாணவி சா.கார்த்திகா மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டியில் மூன்றாமிடம் பிடித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியரை சிறுசேமிப்பு மண்டல உதவி இயக்குனர் விஜயராஜ்குமார் பாராட்டி பரிசுகளை வழங்கினார். சாதனை படைத்த மாணவ மாணவியரை குமுதா பள்ளியின் தாளாளர் கே.ஏ. ஜனகரத்தினம்,துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலர் டாக்டர் அரவிந்தன் , இணைச் செயலர் டாக்டர்.மாலினி அரவிந்தன்,முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, விளையாட்டு இயக்குநர் பாலபிரபு மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
மாவட்ட மற்றும் மாநில அளவிலான உலக சிக்கன தின விழா போட்டியில் நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்..

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam