கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மொபைல் செயலி மூலம் பயிர் கணக்கெடுப்பு பணிக்கு உபகரணங்கள் மற்றும் செலவின தொகையினை உறுதி அளித்தபடி வழங்காததை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், ஆர்ப்பாட்டத்தில் கோபி, பவானி, அந்தியூர், சத்தி, தாளவாடி, நம்பியூர் உள்ளிட்ட பகுதுpகளிலிருந்து சுமார் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோசங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.