கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள எலத்தூர் பகுதியில் செயல்பட்டுவரும் கல்குவாரி உரிமத்தினை புதுப்பிப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தில் கல்குவாரி செயல்பட எதிர்ப்பு தெரிவித்து பேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கு எதிராக பொது மக்கள் எதிப்பு தெரிவித்து பேசியதால் சிறுது நேரம் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது,


தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் எலத்தூர், மொடவாண்டி பாளையத்தில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உரிமத்தினை புதுப்பிப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் குருமந்தூரில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது, இதில் கோபிசெட்டிப்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணப்பன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கருத்துகள் பெறப்பட்டது,


இந்த கருந்துகேட்பு கூட்டத்தில் உள்ளூர் பொதுமக்கள் கல்குவாரிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து பேசி வந்த போது தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் கல்குவாரிக்கு எதிராக கேள்வி எழுப்பினர், இவர்களது கருத்திற்க்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறுது நேரம் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, அதனை தொடர்ந்து நம்பியூர் காவல்துறையினர் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.


பின்னர் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரிடம் கல்குவாரி செயல்பட எதிர்ப்பு தெரிவித்து புகார் மனு அளித்தனர்.