கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில்,100 நாள் வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வலியுறுத்தி 300 கும் மேற்பட்ட தொழிலார்கள் மனு அளித்தனர்


தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தின. கீழ் பல லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த நான்கு மாதங்களுக்கு முன் இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை.


தேர்தல் முடிவிற்கு பிறகு அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தேர்தல் முடிந்து இரு மாத காலமாகியும் இதுவரை வேலை வழங்கப்படவில்லை.


இதனால் இந்த வேலையை நம்பி இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடந்த நான்கு மாத காலமாக மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில் இதுவரை இவர்களுக்கு வேலை வழங்குவது குறித்த எந்த அறிவிப்பையும் ஒன்றிய அரசு அறிவிக்கவில்லை. இதனால் பல தொழிலாளர்கள் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் கோபி அருகே உள்ள புஞ்சைத்துறையம்பாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்காக பதிவு செய்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க கூறி புஞ்சை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 300க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.
உடனடியாக மனு மீது நடவடிக்கை எடுத்து வேலை வழங்காவிட்டால் ஒன்றிய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.