

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள மோதூர் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில்; ஆழ்துளை கிணறு அமைத்து 129 பொது குடிநீர் குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யும் பணியினை முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.


கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரக்கன் கோட்டை ஊராட்சி, மோதூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு நிதியின் கீழ் 45 கோடி மதிப்பீட்டில் 516 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது,


தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு நிதியின் கீழ் மோதூர் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைப் தொட்டியுடன் 129 பொது குடிநீர் குழாய்கள் அமைத்தல் பணியினை முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கொங்கர்பாளையம் பகுதியில் செயல்பட்டுவரும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சட்டமன்ற நிதியிலிருந்து மேசை நாற்காலிகளை வழங்கி சிறப்புறையாற்றினர், பின்னர் பள்ளி மாணவர்கள், பறவைகளின் இறக்கைகளை சேமித்து பள்ளியில் காட்சிபடுத்திருப்பதை முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டார்.