நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்500க்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்தன.

More than 500 petitions were concentrated in the CM project camp with people in the Nambiyur Pura Union.

நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அஞ்சானூர், வேமாண்டம்பாளையம் ,கூடக்கரை, பொலவபாளையம், லாகம் பாளையம் பாளையம் ஆகிய 5 ஊராட்சிகளுக்கான  மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நேற்று பூசாரிபாளையம் உள்ள கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.

1722281249140428 1

முகாமிற்கு சத்துணவு திட்ட மண்டல அலுவலர் ப.ரமேஷ் தலைமை தாங்கினார்.
முகாமில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இ – சேவை மையம், தமிழ்நாடு மின்சார வாரியம் , காவல்துறை, வேளாண்மை ,உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை  துறை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை ,உள்ளிட்ட 15 துறை சார்ந்த அதிகாரிகள் 44 திட்டங்களுக்கு  மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 5 ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் மனுக்களை கொடுத்து பயன்பட்டனர்.

 முகாமிற்கான ஏற்பாடுகளை  ஊராட்சி தலைவர்கள் மணிகண்ட மூர்த்தி சிவக்குமார், மணியன், சரஸ்வதி சுப்புரமணி, லட்சுமி மற்றும் நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரஸ்வதி, சாந்தி ஆகியோர் செய்தனர்.

முன்னதாக சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவரும் நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளருமான செந்தில்குமார் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment