கோபியில் மண்டல் குழுவும் திராவிடர் கழகமும் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

மண்டல் குழு பரிந்துரைகள் குறித்தும், அதற்காக இன்று வரை போராடி வரும் திராவிடர் கழகம் குறித்து திராவிடர் கழக வெளியுறவுத்துறை செயலாளராக உள்ள கோ.கருணாநிதி புத்தகமாக எழுதி உள்ளார்.
இந்த நூல் வெளியீட்டு விழா கோபியில் தனியார் கூட்ட அரங்கில் திராவிடர் கழகத்தின் தலைமை கழக அமைப்பாளர் ஈரோடு சண்முகம் தலைமையில் மாவட்ட காப்பாளர்கள் சீனிவாசன், சிவலிங்கம், ராஜமாணிக்கம், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர் குப்புசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மதிமுக மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர்.விஜயகுமார் நூல் ஆய்வுரை வழங்கினார். திராவிடர் கழக மாவட்ட தலைவர் மு.சென்னியப்பன் இணைப்புரை வழங்கினார்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்.
அதைத்தொடர்ந்து ஏறபுரை வழங்கிய நூல் ஆசிரியர் கோ.கருணாநிதி நூல் குறித்தும், மண்டல் குழு பரிந்துரையை நிறைவேற்ற போராடி வரும் திராவிடர் கழகம் மற்றும் திமுக குறித்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் திமுக மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் மணிமாறன், கோபி நகர செயலாளர் என்.ஆர்.நாகராஜ், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் குள்ளம்பாளையம் கே.கே.செல்வன், டி.என்.பாளையம் ஒன்றிய திமுக செயலாளர் சிவபாலன், ஈரோடு வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அணி தலைவர் சண்முகசுந்தரம், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குணசேகரன், கோபி நகர இளைஞரணி அமைப்பாளரும், மாவட்ட திட்ட குழு உறுப்பினருமான விஜய் கருப்புசாமி, டாஸ்மாக் தொழிற்சங்க கோபி தாலுகா செயலாளர் கார்த்திக், ஆதி தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, வழக்கறிஞர் கந்தசாமி, திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் யோகானந்தம், நம்பியூர் நகர திமுக செயலாளர் ஆனந்தகுமார், காமராஜ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜவஹர், காங்கிரஸ் கட்சி நிர்வாகி மங்கலம்.முத்து ராமலிங்கம், சொக்கனூர் சென்னியப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்