விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி உறுதியானதை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடிக்கும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்.


விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது, இதில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வந்தார்.


இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா வெற்றி உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் திமுக நகர மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பட்டாசுகள் வெடித்தும் பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.