
கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு பிரிவில் உதவியாளராக பணிபுரியும் சுப்பிரமணியம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சிவில் என்ஜினீயர் வருண் என்பவர் புதிதாக கட்டிடம் கட்டுவது தொடர்பாக அனுகிய போது புதிய கட்டிடம் கட்ட அனுமதி கொடுப்பதற்கு வஞ்சகமாக 40 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார் இறுதியாக 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
வருண் இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல் படி வருண் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு சென்று ரசாயனம் தடவிய பணத்தை சுப்பிரமணியனிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை ஏ. டி.எஸ்.பி ராஜேஷ் மற்றும் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சுப்பிரமணியத்தை கையும் களவுமாக பிடித்து அவரிடமிருந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ்ரல் வழங்கப்பட்ட 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.