கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் தூய்மை இந்தியா திட்டம் பத்தாண்டு நிறைவு விழா மற்றும் கோபிசெட்டிபாளையம் நகராட்சி 75 ஆம் ஆண்டு நிறைவுற்றதை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.L


இந்நிகழ்வில் நகர மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் நகராட்சி ஆணையாளர் திருமதி சுபாஷினி கோபி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் இந்நிகழ்ச்சியை கொடி அசைத்து துவக்கி வைத்தனர் அவர்களுடன் நகராட்சி துப்புரவு அலுவலர் சோலராஜ் மற்றும் துப்புரவு ஆய்வாளர் நிரூபன் சக்கரவர்த்தி தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள்.


கோபி கல்லூரியின் பேராசிரியர்கள் என் எஸ் எஸ் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தூய்மையே சேவை குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள குப்பைகளை கல்லூரி மாணவர்கள் அகற்றி கொடுத்தனர் .