கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில்;, தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது,


கோபிசெட்டிபாளையம தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில், தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, வாய்க்கால் ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது,


தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) முருகன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள், தீ அணைக்கும் முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
கேஸ் தீ பிடித்தால், ஈர சாக்கை கொண்டு எவ்வாறு அனைப்பது என்பது குறித்து செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு செயல் விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் விபத்து ஏற்படும் போது, நோயாளிகளை எவ்வாறு பாதுகாப்பாக, பதட்டப்படாமல் வெளியே அழைத்து வர வேண்டும்.
நடக்க முடியாதவர்களை எவ்வாறு மீட்க வேண்டும். தீ விபத்தின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தீ விபத்து ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையுடன் இருப்பது குறித்தும் விளக்கப்பட்டது.