கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாய முகாமில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபாலசுன்கரா கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.


கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த ஆண்டுக்கான வருவாய் தீர்வாய முகாம் இன்று தொடங்கி வருகிற 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது,
இந்த முகாமில் முதல் நாளக இன்று தடபள்ளிக்கரை, சிங்கிரிபாளையம்,அக்கரை கொடிவேரி, ஒடையகவுண்டம்பாளையம், தடபள்ளி கிராமம், சோழமாதேவிகரை, அளுக்குளி அ மற்றும் ஆ, போடிசின்னாம்பாளையம் ஆகிய கிராமங்களுக்கான தீர்வாய முகாம் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது,


இந்த முகாமில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால சுன்கரா மற்றும் பயிற்சி ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, வட்டாட்சியர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்,
இதில் கலந்து கொண்ட பொதுமக்கள், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, வீட்டுமனை வழங்க கோருதல் உள்ளிட்ட பல்வேறு வகையான விண்ணப்பங்களை மனுக்களாக அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ராஜகோபால சுன்கரா அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து வருகின்றனர்.