நம்பியூர் அருகே உள்ள அளுக்குளியில் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் 100 நாட்கள் வேலை வழங்க ஊராட்சி மன்ற தலைவரிடம் திட்டப் பணியாளர்கள் மனு அளித்தனர்.

நம்பியூர் அருகே உள்ள அளுக்குளி ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர்.

அளுக்குளி ஊராட்சியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் 10 நபர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டுவதாகவும், மத்திய அரசு 2024-25 நிதியாண்டிற்கு குறைந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் பணி வழங்க முடியாத நிலையில் உள்ளதாகவும், இதனால் பணியாளர்கள் அவதிப்பட்டு வருவதாகவும்,


அளுக்குளி ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அட்டைதாரர்களுக்கு 100 நாட்கள் பணி வழங்க கோரி இன்று 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அளுக்குளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.