நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றி பணி ஓய்வுபெற்ற பணியாளர்கள் இளநிலை உதவியாளர் எம்.மகாலிங்கம், அலுவலக உதவியாளர் வீ.இலட்சுமணன் ஆகியோர்க்கு பணிநிறைவு பாராட்டு விழா நம்பியூர் சிவசக்தி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


இவ்விழாவின்
நம்பியூர்திமுக ஒன்றிய செயலாளரும், பேரூராட்சித்தலைவருமான மெடிக்கல் செந்தில்குமார் தலைமையில்நடைபெற்றது. செயல் அலுவலர் (காசிபாளையம்) மணிகண்டன் வரவேற்புரையாற்றினார் இதில்பேரூராட்சி துணைத் தலைவர் தீபாதமிழ்செல்வன், திமுக பேரூர் கழக செயலாளர் எஸ்.பி.ஆனந்தகுமார், திமுக பொதுக்குழு உறுப்பினர்கீதா முரளி,அதிமுக பேரூர் கழக செயலாளர்கள் சேரன்சரவணன், கருப்பணகவுன்டர், நம்பிமணி, எம்எம்எம் செல்வம்,அருண் மஹால்பிரபு,பேரூராட்சி கவுன்சிலர்கள் லட்சுமி சண்முகம், நாகேஸ்வரி சந்திரன்,கந்தசாமி மற்றும் முன்னாள் செயல் அலுவலர்கள் சுப்பிரமணியம், சி.பழனிச்சாமி, சி.பாலகிருஷ்ணன், முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ம.பவேசு, ஆர்.ரங்கசாமி, கூட்டுறவு செயலாளர் கே.செல்வராசன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், அரசு துறைசார்ந்த அலுவலர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்து பாரட்டினர்.விழாவிற்க்கு வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் பணி நிறைவுபெற்ற பேரூராட்சி இளநிலை உதவியாளர் எம். மகாலிங்கம் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.