நம்பியூர் அரசு போக்குவரத்து கழகத்தில் மேலாளர் ரமேஷ் என்பவர் போக்குவரத்து தொழிலாளர்கள் முன்கூட்டியே விடுமுறை கேட்டால் விடுமுறை அளிக்காமல் அடிக்கடி விடுமுறை எடுத்தது போல பதிவு செய்வதாகவும் இதனால் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி நம்பியூர் கிளை மேலாளர் ரமேஷ் ஐ கண்டித்து சி ஐ யூ டி கிளை தலைவர் சண்முகம் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.