கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கூகலூர் பகுதியில் விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் மற்றும் வேளாண்மைதுறை அதிகாரிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

Agriculture college students and agriculture department officials explained the process of drone spraying to farmers in Koogalur area near Kopisettipalayam.

ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர், அந்த வகையில் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், விவசாயம் செய்வதன் மூலம் அதிக மகசூல் பெறுவதன் அவசியம் குறித்தும் விவசாயிகளிடம் வேளாண்மை துறை மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்

1716679202485256 0

அந்த வகையில் இன்று கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கூகலூர் பகுதியில் டி.என்பாளையத்தில் அமைந்துள்ள தனியார் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் அப்பகுதி விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதன் அவசியம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது

1716679197024511 1

மேலும் நவீன தொழில்நுட்பமான ட்ரோன மூலம் விவசாய நிலங்களுக்கு நுண்ணூட்டச் சத்துகள் தெளிக்கப்பட்டது. நுண்ணூட்டச் சத்துகள் பற்றாக்குறையினால் உற்பத்தி திறன் நாளுக்கு நாள் குறைந்த வரும் நிலையில் நுண்ணூட்டங்களை மண்ணில் உரமாக இடும் பொழுது, அவை தாவரத்திர்க்கு கிடைப்பதற்கு 3 முதல் 4 மாதங்கள் எடுத்துக் கொள்வதாகவும்

1716679190245048 2

இதே இதனை இலை வழியாக தெளிக்கும் பொழுது எளிதாக பயிர்கள் எடுத்துக் கொள்வதாகவும் விவசாயிகளிடம் கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முரளி ,வேளாண் அலுவலர்கள் விவசாயிகளுடன் பயிர்களில் ஏற்படும் பொதுவான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார். பின்னர் ட்ரோன் மூலம் பயிர்களுக்கு நுண்ணூட்டச் சத்துகள் தெளிப்பதை நேரடி செயல் விளக்கமாக செய்து காண்பித்தனர். தொடர்ந்து ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதினால் ஆள் பற்றாக்குறை குறைக்க முடியும் எனவும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்