கோபியில் வருகிற 27 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா குறித்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது

மக்களவை 18 வது பொதுத் தேர்தல் ஆறாவது கட்டம் நாளைய தினம் நடக்க உள்ளது 7 ஆம் கட்ட வாக்கு பதிவு ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவடையுள்ளது
17 தேர்தல்களை நாடு சந்தித்து இருந்தாலும் பதினெட்டாவது பொதுத் தேர்தல் என்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது
அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து ஏற்படும் என்கிற நிலை உருவாகி இருக்கிறது
மதச்சார்பின்மை என்கிற கொள்கைக்கு கேடு விளைவிக்க கூடிய பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டுள்ளது
அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையம் நீதிமன்றங்கள் உட்பட சிபிஐ உட்பட வருமானவரித்துறை அமலாக்கத்துறை கள் எல்லாம் இன்றைக்கு சுதந்திரமாக செயல்பட முடியாத நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது
கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சி தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்ற வில்லை
இதை பயங்கரமாக நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்,
ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்ற வாக்குறுதி,
வெளிநாட்டு கருப்பு பணம் நீக்கப்பட்டு இந்திய குடிமகனுக்கும் 15 லட்சம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற வாக்குறுதி, விவசாய என்னுடைய வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவேன் என்ற வாக்குறுதி, வேளாண்மை விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை நிறைவேற்றுவேன் என்ற வாக்குறுதி தமிழ்நாட்டினுடைய மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு காண்பின் வாக்குறுதி
விலைவாசியை கட்டுப்படுத்துவேன் என்ற வாக்குறுதி போன்ற எந்த ஒரு வாக்குறுதியையும் 10 ஆண்டுகளில் மோடி நிறைவேற்றவில்லை
இதற்கு மாறாக விவசாயிகளுக்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்பட்டது தொழிலாளர்களுக்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்பட்டது
இன்றும் தமிழக மேலாளர்கள் இலங்கையினுடைய கடற்கரையினால் துன்புறுத்தப்படுகிறார்கள் அவர்களுடைய தொழிலுக்கோ உடைமைகளுக்கோ உயிருக்கு பாதுகாப்பாற்ற நிலை இன்றைக்கும் தொடர்ந்து வருகிறது
பிரதமர் மோடி நாட்டினுடைய பிரதமர் என்கிற முறையில் பத்தாண்டு கால பிரதமராக இருந்த காலத்தில் நாட்டு மக்களுக்கு என்னென்ன சாதனைகளை செய்தேன் என்று பட்டியலிட்டு சொல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது
அந்த கடமையை செய்வதற்கு மாறாக அதைப் பற்றி எதுவுமே பேசவில்லை அதற்கு மாறாக
தமிழ்நாட்டில் பிரச்சாரத்திற்கு வந்தபோது நான் புத்துணர்ச்சி பெறுகிறேன் என்றார் தமிழர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னார்
தமிழை எனக்கு பிடிக்கும் என்றால் வள்ளுவர் எனக்கு பிடிக்கும் என்றார் கப்பலோட்டிய தமிழனை பாராட்டியுள்ளார் பாரதியாரை பாராட்டியுள்ளார் திருவள்ளுவரை பாராட்டி உள்ளார்
தமிழ்நாட்டில் இவ்வாறான பிரச்சாரத்தை மோடி மேற்கொண்டார்
தற்போது வட மாநிலங்களில் பிரச்சாரத்திற்கு செல்லும் போது தமிழர்களை திருடர்கள் என்றார்
பூரி ஜெகநாதர் கோவிலில் உள்ள கருவூலத்தின் சாதி 2018 ஆம் ஆண்டு காணாமல் போய்விட்டது
அதை நீதிமன்றத்தின் படி ஒரு கமிஷன் போடப்பட்டு விசாரணையில் இருந்து கொண்டுள்ளது
மோடி தற்போது பிரச்சாரத்தில் அந்த சாதி தமிழ்நாட்டில் உள்ளது என சொல்லுகிறார்
நாட்டினுடைய பிரதமர் அவரிடத்தில் சிபிஐ அமலாக்கத்துறை வருமானவரித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் அவரிடம் உள்ளது.
அது உண்மையில் சாவி திருடப்பட்டு தமிழ்நாட்டில் உள்ளது என்பது உண்மையானால் அவருக்கு இருக்கிற வாய்ப்பை பயன்படுத்தி சட்டரீதியாக விசாரணை மேற்கொண்டு தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தமிழர்களையும் அவர் சிறையில் அடைக்க வாய்ப்பு உள்ளது
2018ல் காணாமல் போனது இதுவரை என்ன செய்து கொண்டு இருந்தார் என்று தெரியவில்லை
தற்போது தமிழர்கள் மீது அபாண்ட பழியை சுமத்துகிறார்
ஒன்பது முறை மோடி தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வந்துள்ளார்
பூனை உரிய சுட்டது போல சுற்றுவது போல சுற்றி சுற்றி வந்தார் அவருடைய பிரச்சாரத்தால் எந்த பயனும் இல்லை
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாது என்பது மட்டுமல்ல பல தொகுதிகளில் பாஜக காப்பு தொகையை கூட பெற முடியாது என்பதுதான் உண்மை
இந்த கோபத்தில் தான் மோடி தமிழர்களை திருடர்கள் என்கிறார்
10 ஆண்டு கால சாதனையை சொல்ல முடியாமல் வேறு வகையில் பிரச்சாரம் செய்தால் பயன் கிடைக்கும் என்ற முறையில் இந்து முஸ்லிம் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டார்
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மக்களுடைய சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்வார் பெண்களின் தாலியை கூட பறிப்பார்கள் அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்கு அது வழங்கப்படும், முஸ்லிம்களிடையே தாலியை கொடுத்து விடுவார்கள் என்று பிரச்சாரம் மேற்கொண்டார்
இது இது மிக மோசமான பிரச்சாரம் நாட்டினுடைய அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான பிரச்சாரம் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரான பிரச்சாரம்
இதை உரித்தெல்லாம் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை
வட மாநிலம் தென் மாநிலம் என்று பிரிவினை வாதம் பேசுகிறார்,வடக்கு தெற்கு என்று பேசிப் பார்த்தார்
எந்த வகையிலும் பயன் கிடைக்காத நிலையில் கடைசியாக பேசி உள்ளது நான் ஒரு கடவுளின் அவதாரம் என்று தெரிவித்துள்ளார்
கானா இதிகாசங்களில் கிராமம் கிருஷ்ணர் அவதாரம் எடுத்து வந்ததைப் போல அதைப்போல நான் மனிதன் அல்ல கடவுளால் அனுப்பப்பட்ட பிரதிநிதி, தன்னை ஒரு கடவுள் என்று சொல்லிக் கொள்கிறார்
மக்களுக்கு கடவுளின் மீது நம்பிக்கை உள்ளது அது அவர்களுடைய விருப்பம் சார்ந்தது
ஜாதியின் மீது நம்பிக்கை உள்ளது அது அவரவர் விருப்பம் சார்ந்தது
மக்களுக்கு இருக்கின்ற நம்பிக்கையை தவறான முறையில் பயன்படுத்தி வெறியூட்டி கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் ஜாதியின் பெயராலும் மக்களிடத்தில் ஒரு வெறியை உருவாக்கி அதன் மூலமாக கடந்த ஒரு குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி மேற்கொள்கிறார்
பிரச்சாரம் எப்படி இருக்கிறது என்று சொன்னால் இந்திய கூட்டணி மீது தொடர்ந்து மோடி பழி சுமத்துகிறார் நாட்டை பிளவுபடுத்துகிறார்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இருப்பார்கள் என்று என்று கூறுகிறார்,
இட ஒதுக்கீட்டுக்கு யார் எதிராக இருப்பார்கள் என்பதை உலகம் அறியும்
இட ஒதுக்கீடு காரணமாகத்தான் விபி சிங் ஆட்சியை பாஜக கவிழ்த்தது மண்டல குழு பரிந்துரை அமல்படுத்துவேன் என்றும் வி பி சிங் கூறியதாலேயே அந்த அரசாங்கத்தை கவிழ்த்த கூட்டம் தான் பாஜக
இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இந்தியா கூட்டணி இருக்கும் என்றும் அதை நான் இறக்கும் வரை அனுமதிக்க மாட்டேன் என்று வீர ஆவேசமாக மோடி பேசுகிறார்
இந்த கம்பீர பேச்சு எப்படி உள்ளது என்று சொன்னால் திருவிழா கூட்டத் திருடனுக்கும் மோடிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது
திருவிழா கூட்டத்தில் திருடர்கள் திருடி விடுவார்கள் திருடு கொடுத்தவர்கள் கதரியாளின் போது அதோ திருடன் ஓடுகிறான் என்று ஒரு குரல் கேட்கும் அந்த சத்தத்தை கேட்டு அந்த திசையை நோக்கி அனைவரும் ஓடுவார்கள்
திருவிழா கூட்டம் திருடனுக்கும் பிரச்சனையை திசை திருப்பும் நரேந்திர மோடிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது
இவ்வளவு மோசமான பிரச்சாரத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் புகாராக அளித்துள்ளனர்
மோடி அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு புறம்பாக பிரச்சாரம் செய்கிறார் தடுத்து நிறுத்த வேண்டும் என்று புகார் கொடுத்தார்கள்
எந்த புகார்க்கும் எந்த பதிலும் அளிக்காத தேர்தல் ஆணையம் தேசிய தலைவர் பாஜக நட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்புகிறது
அதை அதை சரி செய்வதற்கு காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்புகிறது
யார் மீது புகாரோ அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக பல்லி விழுந்த பாம்பாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு கொண்டுள்ளது
இது நாட்டிற்கு ஆபத்தானது, தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவும் தனித்தன்மையோடும் செயல்பட வேண்டும்
எவருடைய கட்டுப்பாட்டிற்கும் உட்பட்ட அமைப்பாக தேர்தல் ஆணையம் செயல்படக்கூடாது ஆனால் இன்று முழுக்க முழுக்க நரேந்திர மோடியின் கட்டுப்பாட்டிற்கு தேர்தல் ஆணையம் சென்று விட்டது என்பது மிகுந்த கவலைக்குரியது
அடுத்த இரண்டு கட்ட தேர்தல் எவ்வாறு நடைபெறும் என்று தெரியவில்லை பல இடங்களில் இருந்து புகார்கள் வருகிறது
வாக்குப்பதிவு நடைபெற்ற முடிந்த உடனேயே எத்தனை சதவீதம் வாக்குப்பதிவுகள் நடைபெற்றது என்பது அறிவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது
வாக்கு எண்ணும்போது எத்தனை தில்லுமுல்லுகள் நடைபெறும் என்பதை நினைத்தாலே அச்சமாக உள்ளது
எந்த பலிபாவத்தையும் செய்யக்கூடிய கூடியவர்கள் தான் பாஜகவினர்
அமித்ஷா மோடியின் உடைய கூட்டணி எதை வேண்டுமானாலும் செய்வார்கள்
எதைச் செய்தாவது அதிகாரத்தை கைப்பற்றிட வேண்டும் என்று ஒரு அரசியல் வெறி பதவி வெறி பிடித்து கூட்டமாக இருக்கிறார்கள் ஏற்கனவே வெற்றி பெற்ற சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை கொடுத்து வாங்கினார்கள் இப்போது பொது தேர்தலில் வேட்பாளர்களையே விலை கொடுத்து வாங்குகின்றனர்
வேட்பு மனுவை தாக்கல் செய்யாமலே செய்கிறார்கள் தாக்கல் செய்தவர்கள் திரும்பப் பெறுகிறார்கள் இப்படிப்பட்ட அவள நிலை என்றைக்கும் ஏற்பட்டதில்லை
இது நாட்டிற்கு நல்லதல்ல
இனியாவது தேர்தல் ஆணையம் நாட்டு மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கை போயிட்டு போகாமல் நம்பகத் தன்மையை காப்பாற்ற வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது ..
கேரளா அரசாங்கம் சிலந்தியாற்றில் அணைக்கட்டும் முயற்சியை தொடங்கியுள்ளது தமிழ்நாட்டினுடைய அனுமதியையோ ஒப்புதலையோ பெறாமல் அணையை கட்டி வருகிறது இது மிக கடுமையான கண்டனத்திற்குரியது
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று கேரளா முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்
அது மிகுந்த பொறுப்பான கடிதம் எந்த அரசியல் உள்நோக்கமும் இன்றி மிகப் பொறுப்பான கடிதம்
எந்த அடிப்படையில் நீங்கள் அணை கட்டுகிறீர்கள் அதைப்பற்றி நீங்கள் எங்களுக்கு எந்த விதமான விளக்கத்தையும் அளிக்கவில்லை
இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அணை கட்டுவதை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்
தோழமை உணர்வோடு அந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்திற்கு கேரள முதலமைச்சரும் கேரளா அரசாங்கமும் மதிப்பளிக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்
மதிப்பளித்து அணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் திருப்பூர் மாவட்டம் கரூர் மாவட்டத்திற்கு பெருமளவு விவசாயத்திற்கு பயன்படும் பிரச்சனை குடிநீர் பிரச்சினையை தீர்க்கக் கூடிய பிரச்சனை இந்த அணையை கட்டி முடித்தால் திருப்பூர் கரூர் மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் குடிநீர் தட்டுப்பாடு மிக கடுமையாக ஏற்படும் கேரளத்தில் இருக்கிற அரசாங்கம் மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய அரசாங்கம் மக்களின் மீது நம்பிக்கை கொண்ட அரசாங்கம், திருப்பூர் கரூர் மாவட்ட பொதுமக்களின் நலன் கருதி அணை கட்டுவது உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை வனத்தில் வாழுகின்ற அனைத்து உயிரினங்களும் பாதுகாக்கப்பட வேண்டியவை மாறுபட்ட கருத்து கிடையாது
அதேபோல பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டு பாதிக்க கூடாது பாரம்பரியமாக மலைப்பகுதிகளில் வாழுகின்ற மலைவாழ்மக்கள் தான் வனத்தைக் காப்பாற்றிக் கொண்டு வருகின்றனர் அவர்களும் பாதிக்கப்படக்கூடாது யானை வழித்தடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது அவைகள் குறித்து வெளிப்படையாக அறிவித்து மக்களிடம் கேட்டறிந்து பொது மக்களின் நலன் கடுகளவும் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகின்றோம்
குற்றாலத்தில் உள்ள பல்வேறு நீர்வீழ்ச்சிகள் வனத்துறையினரிடம் ஒப்படைப்பதாக தகவல்கள் வந்துள்ளது, ஏற்கனவே பல நீர்வீழ்ச்சிகள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, அவ்வாறு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நீர்வீழ்ச்சிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
அவ்வாறு வருகின்ற தகவல்கள் உறுதியானால் பொதுமக்களும் சிறு வியாபாரிகளும் சுற்றுலா பயணிகளும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
இந்தத் திட்டம் இருக்குமேயானால் இந்தத் திட்டத்தை கைவிடுவதோடு மட்டுமல்ல ஒப்படைக்கப்பட்ட நீர்வீழ்ச்சிகளையும் திரும்ப பெற வேண்டும்.