நம்பியூர் பகுதியில் கனமழை காரணமாக உடைப்பு ஏற்பட்ட சந்தன குளத்தை உடனடியாக சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

The area has demanded the immediate alignment of the market pool due to heavy rains in the Nambiyur area

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை திடீரென கன மழை இரண்டு மணி நேரத்திற்கு மேல் பெய்ய தொடங்கியது.

1716299791820513 0

மழை காரணமாக இச்சிபாளையம், கெடாரை, வெள்ளாளபாளையம்,உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி சந்தன குளத்தை சென்றடைந்துள்ளது

1716299787904948 1

அதிக அளவு மழை நீர் சந்தன நகர் பகுதியில் உள்ள குளத்தில் நிரம்பி ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டது

1716299783010621 2

இந்த குளத்தில் இருந்து தண்ணீர் சந்தன நகர், ஆண்டிக்காடு, கோரக்காடு, ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக வெளியேறியதால் அப்பகுதியில்

தாழ்வான இடங்களில் வசித்து வரும் பொதுமக்கள் மேடான பகுதிக்கு செல்லவும் கால்நடைகளை பாதுகாப்பாக வைக்கவும் காவல்துறை சார்பில் நேற்று இரவு எச்சரிக்கை விடப்பட்டது.

இந்த நிலையில் குளத்திற்கு வரும் நீரின் அளவு குறைந்த நிலையில் முழுமையாக சந்தன குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறியது.

தொடர்ந்து இன்றும் கன மழை பெய்தால் குளம் நிரம்பி அதிக அளவு நீர் வெளியேற வாய்ப்பு இருப்பதால் உடனடியாக உடைப்பு ஏற்பட்ட சந்தன குளத்தை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்