கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காமராஜ் நகரில் உள்ள அரசு மது கடை பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் பீர் பாட்டிலால் தாக்கியதில் மரக்கடை உரிமையாளர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

In a dispute at the Government Wine Shop Bar in Kamaraj, near Kopisetiba, the woodworking owner died miserably on his way to the hospital when the young man hit a bottle of beer.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோவில் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலுச்சாமி(61). இவர் வேட்டைக்காரன் கோவில் பகுதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

1715658171574233 0

மது பழக்கம் உள்ள பாலுசாமி நேற்று இரவு கொளப்பலூர் அருகே உள்ள காமராஜ் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மது கடையில் மது அருந்த சென்றுள்ளார்.
அப்போது அங்கு ஏற்கனவே மது அருந்திக் கொண்டிருந்த கலிங்கியம் தங்கமலை கரடு பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கும் பாலுசாமி க்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

1715666187406986 1

இந்த தகராறு ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கி கொண்டுள்ளனர், அபபோது இந்த இளைஞர்கள் பாலுசாமியை பீர் பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது,

1715666191555518 0

இதில் தலையில் பலத்த காயமேற்படவே, படுகாயமடைந்த நிலையில் இருந்த பாலுசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பாலுசாமி உயிரிழந்தார்.
இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலிங்கியம் தங்கமலை கரடு பகுதியை சேர்ந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்