கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பவானி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக கோபி மதுவிலக்கு காவல் துறையினருக்கு தகவல் ரகசிய தகவல் கிடைத்தது,

தகவலின் அடிப்படையில் பவானி சென்ற மதுவிலக்கு காவல் துறையினர் பவானி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் விடுபட்டிருந்தனர்
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்க்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்சோதனையில் அவர்கள் வைத்திருந்த பையில் 12 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்ததுஅதனை தொடர்ந்து அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த மாதையன் மகன் மதிவாணன்(40) என்பதும், திருச்செங்கோடு சி.எஸ். ஐ. தெருவை சேர்ந்த பழனிசாமி மகன் சிவசக்தி(22) என்பதும், திருச்செங்கோடு சின்னகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் லோகநாதன் (25) என்பதும் தெரியவந்ததுதொடர்ந்து 3 பேரையும் கைது செய்த மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்து கோபியில் உள்ள மதுவிலக்கு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர் விசாரணையில் 3 பேரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.