கோபி அருகே உள்ள புதுக்கரைபுதூரில் இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி சிவில் இன்ஜினியர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தனியார் கல்லூரி பேராசிரியர் படுகாயமடைந்தார்.கோபி அருகே உள்ள மேவாணியை சேர்ந்தவர் ஆறுமுகம்இவரது மகன் கார்த்திக்28 வயதான கார்த்திக், சோமனூரில் எலெக்ட்ரிக்கல் கடை வைத்து உள்ளரா்மேலும் சிவில் இன்ஜினியராகவும் வேலை செய்து வந்தார்இன்று இரவு கார்த்திக் கோபிக்கு செல்வதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார்புதுக்கரைபுதூர் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு சென்ற போது முன்னாள் சென்ற லாரியை முந்தி உள்ளார்அப்போது, கணபதி பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் மேகநாதன் என்பவர் கோபியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பைக் மீது நேருக்கு நேர் மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்மேகநாதன் படுகாயமடைந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்மேகநாதன் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வருகிறார்.விபத்து குறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கோபி அருகே உள்ள புதுக்கரைபுதூரில் இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி சிவில் இன்ஜினியர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தனியார் கல்லூரி பேராசிரியர் படுகாயமடைந்தார்.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam