ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியத்தில் குருமந்தூர் நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு குருமந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவி சந்திரசேகர் தலைமை தாங்கினார்நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர்கள் தம்பி சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி,பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கோபி சட்டமன்ற உறுப்பினர் கே. ஏ. செங்கோட்டையன் குருமந்தூர் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியின் கீழ் ரூ 30 லட்சம் செலவில் புதிய தார்சாலைக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நம்பியூர் மற்றும் எலத்தூர் பேரூராட்சி அதிமுக செயலாளர்கள் கருப்பணன், சேரன் சரவணன், பொலவபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்ட மூர்த்தி, குருமந்தூர் ஊராட்சி கவுன்சிலர் வளர்மதி, குருமந்தூர் ஊராட்சி வார்டு நம்பர்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.