கோபி அருகே உள்ள நம்பியூர் பவர் ஆபிஸ் மேடு பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் ரமேஸ் என்கிற கோபால்சாமி(30). கட்டிட தொழிலாளியான ரமேஸ், நண்பர்கள் சூர்யா மற்றும் சின்னசாமி ஆகியோருடன் குருமந்தூர் அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு குளிக்க சென்றார்.ரமேஸ், வாய்க்காலில் குளித்துக்கொண்டு இருந்த போது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியாத நிலையில் நம்பியூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட ரமேசை தேடி வருகின்றனர். குளிப்பதற்காக வந்தவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அடுத்த நாள் காலை அவர் குளித்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் அவரது அவரது உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.