நம்பியூர் அடுத்த எலத்தூர் பகுதியில் பன்றிகள் அட்டகாசம் பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் பயிர்கள் சேதம்

In Elathur area next to Nambiur, pigs have damaged many acres of maize crops.

நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வரதராஜன் இவர் 4 ஏக்கர் விவசாய தோட்டத்தில் மக்காச்சோளம், மஞ்சள், வெற்றிலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகிறார்.

1714705088792549 1

கடந்த சில நாட்களாக அப்பகுதியில் உள்ள பன்றிகள் தொல்லையால் தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், வெற்றிலை உள்ளிட்ட பயிர்களை பன்றிகள் மிகவும் கடுமையாக சேதப்படுத்தி வருகிறது எனவும் இதுகுறித்து எலத்தூர் பேரூராட்சிக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.

1714705084028878 2

இதுகுறித்து விவசாயி வரதராஜ் கூறுகையில் எலத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சிலர் இறைச்சிக்காக பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பன்றிகளை பட்டியில் அடைத்து வளர்க்காமல் திறந்தவெளியில் நூற்றுக்கணக்கான பன்றிகளை வளர்ப்பதால் தோட்டத்து பகுதிகளில் புகுந்து அறுவடைக்கு தயாராக உள்ள மக்காச்சோளம், கரும்பு பயிர்களை சேதம் செய்ததால் ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சேதங்கள் ஏற்படுத்தி உள்ளது.விவசாயிகள் நாங்கள் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து பயிர்களை வளர்த்தால் ஒரே நாளில் இந்த பன்றிகள் மிகுந்த சேதத்தை ஏற்படுத்துகிறது இது குறித்து எலத்தூர் பேரூராட்சி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் விவசாயிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து பயிர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்