கோபி அருகே 3 வயது குழந்தையின் தாய் மாயம்

Mother -of-3-year-child-lost

நம்பியூர் புளியம்பட்டி ரோடு, தண்டு மாரியம்மன் கோவில் பகுதியில் சேர்ந்தவர் மஞ்சு 24,இவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் ராம்யான் பட்டி. இவரது கணவர் கோபாலகிருஷ்ணன் இறந்துவிட்டார்.இவர்களுக்கு 3.5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.இவரது கணவர் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் அதே பகுதியில் தனது மாமியார் முத்துலட்சுமி 54, மற்றும் தனது குழந்தையுடன் வசித்து வந்தார்.இந்நிலையில் கடந்த மார்ச்., 18 ஆம் தேதி மாலை சிவன் கோயிலுக்கு சென்று வருவதாகவும் குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லும்படியும் தனது மாமியார் முத்துலட்சுமியிடம் சொல்லிவிட்டு சென்றார்.நீண்ட நேரம் ஆகியும் வராததால் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால்,நேற்று நம்பியூர் காவல் நிலையத்தில் மருமகளை காணவில்லை என முத்துலட்சுமி புகார் அளித்தார்.இது குறித்து வழக்கு பதிவு செய்த நம்பியூர் போலீசார் காணாமல் போன பெண்ணை தேடி வருகின்றனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்