கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நல்லகவுண்டன்பாளையத்தில் வலுக்கட்டாயமாக பெண்களை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 3 பேரை கோபி காவல்துறையின் கைது செய்தனர்.

Gobi Police arrested 3 people for forcibly locking women in their houses and engaging them in sex work in Nallakaundanpalayam near Gobichettipalayam

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நல்லகவுண்டன்பாளையத்தில் வலுக்கட்டாயமாக பெண்களை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 3 பேரை கோபி காவல்துறையின் கைது செய்தனர்.. இதில் பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தப்பட்ட பெண் ஒருவருக்கு ஹெச்ஐவி நோய் இருப்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

arrest in sex work2 1551401110669634956

கோபிசெட்டிபாளையம் அருகே நல்லகவுண்டன்பாளையத்தில்; பகுதியில் விபசாரம் நடப்பதாக கிடைத்த தகவலின் படி அப்பகுதியில் கோபி இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்

arrest in sex work 32830230371854339616

அப்போது நல்லகவுண்டன்பாளையத்தில் கஸ்தூரிபாய் வீதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஒரு வீட்டின் முன்பு நின்றிருந்த 3 பேர் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயன்றுள்ளனர்இதனை கண்ட காவல்துறையினர் தப்பியோட முயன்றவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கஸ்தூரிபாய் வீதியில் வசிக்கும் குனசேகரன் என்பவரது வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவது தெரியவந்ததுஅதனை தொடர்ந்து அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் குனசேகரன் என்பவரது வீட்டில் இரண்டு பெண்களை வலுக்கட்டாயமாக அடைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்ததுபின்னர் பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய இரண்டு பெண்களை மீட்ட காவல்துறையினர், குனசேகரன் உட்பட அளுக்குளி பகுதியை சேர்ந்த சரிதா மற்றும் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் ஆகிய 3 பேரை கைது செய்தனர்பின்னர் பாலியல் தொழிலி; ஈடுபடுத்தப்பட்ட பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு ஹெச்ஐவி நோய் இருப்பது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து இது போன்ற விபச்சார தொழிலில் ஈடுபடுவார்கள் அதிகம் குடியிருப்பு பகுதிகள் இருக்கும் இடத்தை தேர்தெடுத்து யாருக்கும் சந்தேகம் வராத அளவிற்கு விபச்சார தொழிலை நடத்தி வருவதாகவும், வீடு வாடகைக்கு விடும் வீட்டின் உரிமையாளர்கள் தங்களுக்கு தெரிந்த நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ சிபாரிசு கடிதம் பெற்று கொண்டோ அல்லது அவர்களை பற்றி நன்கு அறிந்தவர்களோ இருந்தால் வீடு வாடகைக்கு விடும் படி காவல்தறையினர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுவீடு வாடைக்கு விடும் வீட்டின் உரிமையாளர்கள் இதை ஒரு விழிப்புணர்வாக எடுத்துக்கொண்டு தங்கள் வீட்டிற்கு வாடகைக்கு வரும் நபர்களுக்கு வீடு வாடகைக்கு விட வேண்டும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்