கோபி மொடச்சூர் பகுதியை சேர்ந்த தாமுசெட்டியார் நகைக்கடை உரிமையாளர் சேகர் என்பவர் மொடச்சூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து தன் சுய பாதுகாப்பிற்காக உரிமம் பெற்று வைத்திருந்த பிஸ்டல் வகை துப்பாக்கியால் தனக்குத்தானே தனது நெற்றி பொட்டில் வைத்து சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். துப்பாக்கி சப்தம் கேட்டு ஓடி வந்த அவரது மனைவி லதா சத்தம் போட அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கோபி தனியார் அரசு மருத்துவமனை மனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை பெற்று, தற்பொழுது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மேற்படி சேகருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு உடல் நிலைய சரியில்லாமல் சிகிச்சை பெற்றி வீடு திரும்பியுள்ளதாக கூறப்படும் நிலையில் அன்றிலிருந்து மன உளைச்சலில் இருந்துள்ளார், அப்போது அவர் வீட்டில் இருந்த தனியாக இருந்த போது தற்கொலைக்கு முயற்சி செய்ததாக அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் கோபிசெட்டிபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் மற்றும் கோபி உதவி ஆய்வாளர் கபிலக்கண்ணன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்