அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் திமுக முதல்வர் விநாயகர் சதுர்த்தி தீபாவளி போன்ற விழாக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்காமல் புறக்கணிப்பது ஏன்- கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவை துவக்கி வைத்த இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பேச்சு.


கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கவுந்தப்பாடி பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வளத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்த ஊர்வலமானது கவுந்தப்பாடி பகுதிகளின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கவுந்தபாடி அருகே உள்ள பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது.முன்னதாக விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசுகையில்விநாயகர் சதுர்த்தி என்றாலே மக்கள் சினிமா நடிகர்கள், மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பின்னால் செல்லாமல், இளைஞர்கள் பெண்கள் என அனைவரும் இந்து சனாதன தர்மத்தை பாதுகாக்க வேண்டும் இன்று விழாவில் கலந்து கொண்ட அனைவரும் பெருமைபடத்தக்கவர்கள்.
எந்தக் கட்சி என்றாலும் தேசபக்தி இருக்க வேண்டும், எந்தக் கட்சி என்றாலும் தெய்வ பக்தி இருக்க வேண்டும், முன்னாள் முதல்வர் காமராசர் தேசபக்தி கொண்டவர்,தமிழ்நாட்டில், காமராசர், சி சுப்பிரமணியம் போன்ற அமைச்சர்கள் வறுமையை போக்கி பசுமை புரட்சியை ஏற்படுத்தினார்கள் அவர்கள் உருவாக்கியது தேசிய மாடல், தற்போது குடிகார மாடல் வந்துள்ளது.இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகாமல் ஆன்மிகத்திற்க்கு கொண்டு வருவதற்காக தான் இன்று விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்திக் கொண்டுள்ளோம்.கோவையில் அரசு பள்ளியில் மகாவிஷ்ணு ஆன்மீகம் பேசியது குறித்து, பாடநூல் வடிவமைப்புக்குழுவில் உள்ள திண்டுக்கல் லியோனி சுமதி போன்றோர் மாணவர்களிடையே பேசலாம், ஆனால் மாணவர்கள் மத்தியில் ஆன்மீகம் குறித்து பேசினால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர், சமீபத்தில் திமுக அரசு முத்தமிழ் முருகப்பெருமான் மாநாடு நடத்தியது
அந்த மாநாட்டில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து அடுத்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் அறநிலையத்துறை சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த வேண்டும் என்று.அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் திமுக முதல்வர் விநாயகர் சதுர்த்தி தீபாவளி போன்ற விழாக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்காமல் புறக்கணிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்..