கோவையில் ஜெம் அறக்கட்டளையின் மூலமாக வாகையர் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த தமிழகமெங்கும் தேர்வு செய்யப்பட்டு 180 நபர்கள் வாகையர் பட்டம் பெற்றனர். இதில் ஈரோடு மாவட்டம் அகஸ்தியா தற்காப்புக்கலை பயிற்சி மாணவர்கள்,கோபி வைரவிழா பள்ளியில் படிக்கும் ஜவகர் சிறுவர் மன்ற சிலம்பக்கலை மாணவர்கள் ரித்தீஷ் வெற்றிவேல் மகிழன் பிரேம் கிருத்திக், கனிஷ்க், சரண் ,ஜெய்குரு, சிவசர்வேஸ், மாஸ்டர் சா. குணசேகரன் ஆகியோர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு கொண்டு தங்கப்பதக்கம் வெற்றி பெற்றதற்காக வாகையர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர் கராத்தே ராஜா மற்றும் நகைச்சுவை மன்னன் மதுரை முத்து அவர்கள் கலந்துகொண்டு சான்றிதழ்களும் பரிசுகளையும் வழங்கினர்.