நம்பியூர் அடுத்த வேம்மாண்டம்பாளையம் கரட்டுப்பாளையம் அருகில் கரடி கோயில் உள்ளது கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கிடாவெட்டு நடைபெற்றுள்ளது.
இதில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பசும்பொன் தேசிய கழகம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஐந்து கார்களில் 30க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்துள்ளனர். அப்பொழுது வாலியூர் என்ற இடத்தில் போதையில் காரை ஓட்டிய நபர் எதிரே வந்த இரு சக்கர வாகனம் இது மோதியுள்ளார் இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த நபர்கள் காரில் வந்த நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காரில் வந்த நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மிரட்டி 5 ஆயிரம் பணத்தை பெற்றுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் காரில் வந்த நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அதைத் தொடர்ந்து மது போதையில் இருந்து நபர் அவசர அவசரமாக காரை பின்னோக்கி வேகமாக இயக்கியுள்ளார் அப்பொழுது காரின் பின்னால் நின்ற பெண்ணின் மீது மோதும்படி சென்றதால் பொதுமக்கள் அந்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதில் ஆத்திரமடைந்த நபர் தன்னுடன் வந்த நபர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து அவர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கே இருந்த 10க்கும் மேற்பட்ட நபர்களை காரில் வந்த போதை ஆசாமிகள் 30க்கும் மேற்பட்டோர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.தாக்கி விட்டு கிராம மக்கள் ஒன்று கூடுவதை அறிந்த இளைஞர்கள் உடனடியாக காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டு சென்றனர், தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கூறி 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நம்பியூர் புளியம்பட்டி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர் அதை தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது இதனால் சுமார் 30க்கும் மேற்பட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உடனடியாக வழக்கு பதிவு செய்து வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்களை கைது செய்வதாகவும் காவல் ஆய்வாளர் உறுதி அளித்ததின் பெயரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர் அதை தொடர்ந்து தாக்குதல் நடத்திய நபர்கள் மீண்டும் அப்பகுதிக்கு வருவோம் என தெரிவித்து சென்றதால் இரவு நேரத்தில் ரோந்து பணி மேற்கொள்ளவும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கிராம மக்கள் காவல்துறையிடம் கோரிக்கை வைத்தனர்.
தாக்குதலில் காயமடைந்த 5 நபர்கள் கோபிச்செட்டிப்பாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது வரப்பாளையம் காவல் நிலையத்தில் கிராம மக்கள் புகார் அளித்தனர் புகாரில் கரடி கோவில் கிராமத்தின் ஒதுக்குப்புறமாகவும் அடர்ந்த காட்டு பகுதியில் உள்ளதால் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது.
இதனால் கோவிலுக்கு வரும் இளைஞர்கள் மது அருந்திவிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதியைச் சார்ந்த பெண்களிடமும் ரகளையில் ஈடுபவதாகவும் சூதாட்டத்தில் ஈடுபடுவதாகவும் இதனால் கோவில் சுற்றியுள்ள பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் காரின் பதிவெண் கொண்டு தாக்குதல் நடத்திய நபர்களை உடனடியக கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர் .
நம்பியூர் அருகே மது போதையில் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரப்பாளையம் போலிஸ் நிலையத்தில் கரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார்

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam