
கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் வெய்யிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகன போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியிலுள்ள காவலர்கள் நாள் தோறும் கடுமையான வெப்பம் காரணமாக உடல்சோர்வுற்று காணப்படுகின்றனர்.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் போக்குவரந்து காவல் எல்லையில் பணியாற்றும் காவலர்களின் தாகத்தை தனிக்க மோர் மற்றும் வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளசிறப்பு தொப்பி ஆகியவற்றை தனியார் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் சார்பில் கோடைகாவம் முழுவதும் மோர் வழங்கும் நிகழ்ச்சியின் துவக்கவிழா கோபி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் கோபி துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் கலந்துகொண்டு .
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலிருந்த காவலர்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட மோர் மற்றும் வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் தொப்பி ஆகியவற்றை வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளர் முருகன் உதவி ஆய்வாளர்கள் தண்டபானி மற்றும் பிரபாகரன் உள்ளிட்ட போக்குவரத்து காவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்