நம்பியூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை.

A woman who was suffering from abdominal pain hanged herself near Nambiyur.

கோபி அருகே உள்ள அலங்கியம் அர்ஜுனா காலனியை சேர்ந்தவர் செல்வகுமார், இவருக்கும் கொடிவேரி டிஜிபுதூர் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரின் மகள் நந்தினி என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது,செல்வகுமார் நந்தினி தம்பதியினருக்கு பிரதீப் சித்தார்த் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர், நந்தினி, மாதவிடாய் சமயங்களில் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்,இந்த இந்த நிலையில் நேற்று கணவர் செல்வகுமார் தனது குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு கடைக்கு சென்றுள்ளார்கடைக்குச் சென்று விட்டு திரும்பிய போது தனது மகன்கள் இருவரும் வீட்டின் வெளியே நின்று இருப்பதை கண்டு மகன்கள் இடம் கேட்டுள்ளார்அப்போது தனது அம்மா நந்தினி வீட்டிற்குள் சென்று கதவை மூடிவிட்டதாக தனது அப்பாவிடம் தெரிவித்துள்ளார் .தொடர்ந்து செல்வகுமார் கதவைத் தட்டியும் திறக்காத நிலையில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது நந்தினி குழந்தைகளுக்கு தொட்டில் கட்டும் கம்பியில் சேலையை மாட்டி அதில் தூக்கிட்டுள்ளார்.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் உடனே அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்தொடர்ந்து நந்தினியின் பல் மிகவும் குறைவாக இருக்கிறது என்று கூறியதால் மீண்டும் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு நந்தினியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்தொடர்ந்து நந்தினியின் உடலை கோபி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதுஇது குறித்து நம்பியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்