நம்பியூர் அருகே உள்ள எலத்தூரில் 100 ஏக்கர் பரப்பளவில் குளம் ஒன்று உள்ளது.இந்த குளம் கடந்த கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் நிரம்பிய நிலையில் அதன் பின்னர் போதிய மழை இல்லாததால் பெரும்பாலும் குளம் வறண்ட நிலையிலேயே இருந்தது.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளம் தூர் வாரும் பணியின் மற்றும் சீரமைக்க பணி நடைபெற்றது.இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாகவே நம்பியூர் மற்ற சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக 100 ஏக்கர் பரப்பளவிலான குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. 25 ஆண்டுகளுக்கு பிறகு குளம் நிரம்பி உள்ளது அப்பகுதி மக்களுடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த குளம் நிரம்பியுள்ளதால் அந்த பகுதியில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட ஆள்குழாழ் கஇணறுகள், கிணறுகளுக்கு நீர் வரத்து இருக்கும் என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.