நம்பியூர் தனி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்
புதிதாக விவசாய நிலங்களை கையகப்படுத்தி புறவழிச்சாலையாக அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்தவும் வலியுறுத்தல்.
கோவை சத்தியமங்கலம் புறவழி சாலை கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தில் துவங்கி அன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை கடந்து, புளியம்பட்டி வழியாக சத்தியமங்கலத்தை அடையும். சத்தியமங்கலம் புறவழிச்சாலை திட்டத்துக்கான பணிகளை விரைவில் துவங்க மாநில நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. இதன் ஆரம்பகட்ட பணியாக நிலங்களை கையகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவை – சத்தி தேசிய நெடுஞ்சாலையில் 92 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிதாக சாலை அமைக்க அந்தப் பகுதியில் உள்ள நிலங்களை கையகப்படுத்த அரசியல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் அறிவிப்பு வெளியானதிலிருந்து 21 நாட்களுக்குள் ஆட்சேபனையை தெரிவிக்க வேண்டும். அது குறித்த ஆட்சேபனை பற்றி விசாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இந்த நிலையில் ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்த வலியுறுத்தியும், புதியதாக விவசாய நிலத்தை கையகப்படுத்தி புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நம்பியூரில் உள்ள தனி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.புறவழிச்சாலைக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்த கூடாது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
கோவை சத்தியமங்கலம் புறவழி சாலை திட்ட பணிகளுக்கான நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam